இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அறநிலைய துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன், நிலத்தை குத்தகைக்கு கொடுப்பது தொடர்பாக ஆட்சேபங்கள் கோரிய போது, 2012ல் மனுதாரர் ஆட்சேபம் தெரிவித்த நிலையில், 12 ஆண்டுகளுக்கு பின் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். தற்போது அந்த நிலத்துக்கு ரூ.4 லட்சம் வாடகை நிர்ணயிப்பது தொடர்பாக அறநிலைய துறை ஆணையர் பரிந்துரை அனுப்பியுள்ளார்’ என்றர். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘கடந்த 2011ம் ஆண்டு அரசாணையை திரும்ப பெற கோரி 2013ம் ஆண்டு அறநிலைய துறை ஆணையர் அளித்த பரிந்துரை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்குமாறு இந்துசமய அறநிலைய துறைக்கு உத்தரவிட்டனர்.