தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னை திரும்பியது அந்தமான் விமானம்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து அந்தமான் செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் நேற்று காலை 5.15 மணிக்கு 98 பயணிகளுடன் அந்தமானுக்கு புறப்பட்டு சென்றது. இந்த விமானம் நேற்று காலை 7.30 மணி அளவில், அந்தமான் வான்வெளிக்கு சென்றபோது, அங்கு பலத்த சூறைக்காற்று வீசிக்கொண்டு, மோசமான வானிலை நிலவியது.

இதையடுத்து விமானம் அந்தமானில் தரையிறங்க முடியாமல் வானில் தொடர்ந்து வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தது. ஆனால் அந்தமானில் வானிலை சீரடைய வில்லை. உடனே விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டார். இதையடுத்து விமானத்தை மீண்டும், சென்னைக்கு திருப்பிக் கொண்டு வரும்படி அறிவுறுத்தப்பட்டது. எனவே, ஏர் இந்தியா விமானம், அந்தமானில் இருந்து நேற்று மதியம் சென்னைக்கு திரும்பியது.

Related posts

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு