இதையடுத்து விமானம் அந்தமானில் தரையிறங்க முடியாமல் வானில் தொடர்ந்து வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தது. ஆனால் அந்தமானில் வானிலை சீரடைய வில்லை. உடனே விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டார். இதையடுத்து விமானத்தை மீண்டும், சென்னைக்கு திருப்பிக் கொண்டு வரும்படி அறிவுறுத்தப்பட்டது. எனவே, ஏர் இந்தியா விமானம், அந்தமானில் இருந்து நேற்று மதியம் சென்னைக்கு திரும்பியது.