ரூ.100 கோடி நிலஅபகரிப்பு வழக்கு; அதிமுக மாஜி அமைச்சர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

கரூர்: கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவரின், ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலம் அபகரிப்பு தொடர்பான வழக்கில் முன்ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு கடந்த மாதம் 25ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் விஜயபாஸ்கர் உட்பட 3 பேர் மீது வாங்கல் போலீசார் கொலை மிரட்டல், மோசடி செய்தல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே தலைமறைவாக உள்ள விஜயபாஸ்கர் தரப்பில், இடைக்கால முன்ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 1ம்தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம், அதற்கான உத்தரவை 4ம்தேதி வழங்குவதாக கூறியிருந்தார்.

அன்று இந்த மனுவின் மீதான விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சண்முகசுந்தரம், இடைக்கால ஜாமீன் மனு குறித்து பரிசீலிக்காமல், 5ம்தேதி (நேற்றுமுன்தினம்) ஜாமீன் குறித்தே விவாதிக்கலாம் எனக்கூறி திரும்பவும் ஒத்தி வைத்திருந்தார். இந்நிலையில், அன்று மதியம், இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, முன்ஜாமீன் மீதான மனுவின் விசாரணையை 6ம்தேதிக்கு (நேற்று) ஒத்தி வைத்தார். நேற்று இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம், விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related posts

தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

வரும் 20ம்தேதி ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடக்கிறது; திமுக வழக்கறிஞர் அணி சார்பில் 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து கருத்தரங்கம்: சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ அறிவிப்பு

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது: கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்