சென்னை: நிலத்தில் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு தருவது பற்றி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு, என்எல்சி நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. செப்.15-க்குள் பயிர்களை அறுவடை செய்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும் எனவும் நிலத்தை பயன்பாட்டுக்கு எடுக்காவிட்டால் மின்சார உற்பத்தி பாதிக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1.5 கி.மீ. தூரத்திற்கு சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு
வழங்க தயார் என்.எல்.சி. தரப்பு தெரிவித்துள்ளது.