இந்த 4 பேரும், இந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்யக்கூடாது. இதில், கார்த்திகேயன், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமின் உதவியாளர். அரசியல் பின்புலம் கொண்ட இந்த விவகாரத்தில் ஏராளமான பிரச்சினை உள்ளன. புகார்கள் வந்ததால், சார் பதிவாளர் நிலத்தின் பத்திரப்பதிவை மேற்கொள்ள மறுத்து விட்டார். அதனால், மனுதாரர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார் என்று கூறினார்.
இதை கேட்ட நீதிபதி கடனாக ₹24 கோடி கொடுத்தோம், ரூ.12 கோடி கொடுத்தோம் என்று இந்த புகார்தாரர்கள் கூறியுள்ளனர். இவ்வளவு பெரிய தொகைக்கு வருமான வரிக்கணக்கு காட்டப்பட்டதா என்பது தெரியவில்லை. அதனால், இந்த வழக்கில் வருமான வரித்துறையையும், மத்திய அமலாக்கப் பிரிவையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறேன். அதுமட்டுல்ல புகார் கொடுத்துள்ள கார்த்திகேயன் உட்பட 4 பேரையும் எதிர் மனுதாரர்களாக சேர்க்கிறேன். இவர்கள் அனைவரும் பதில் மனு தாக்கல் செய்யும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறேன் என்று கூறியுள்ளார்.