நில மோசடி வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீண்டும் முன்ஜாமின் கேட்டு மனு

கரூர்: நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீண்டும் முன்ஜாமின் கேட்டு மனு தொடர்ந்துள்ளார். எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு மீதான விசாரணையை நாளை மாலைக்கு ஒத்திவைத்து கரூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். ரூ.100 கோடி நில மோசடி புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related posts

அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் 7 பேர் கைது

பார்பி பொம்மையின் 65ஆண்டு கால மாற்றங்கள் குறித்த கண்காட்சி.. லண்டனில் நாளை முதல் 25-ம் தேதி வரை நடைபெறும்

மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத் சோதனையில் ரூ.327 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 15 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை