இந்தோனேசியா ஓபன் கால் இறுதியில் லக்‌ஷயா

ஜகர்தா: இந்தோனேசியா ஓபன் பேட்மின்டன் போட்டி ஜகர்தாவில் நடக்கிறது. அங்கு நேற்று 2வது சுற்று ஆட்டங்கள் நடந்தன.  அதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென்(22வயது, 14வது ரேங்க்), ஜப்பானின் கென்டா நிஷிமோடோ(29வயது, 12வது ரேங்க்) ஆகியோர் மோதினர். அதில் அதிரடியாக விளையாடிய சென் 21-9, 21-15 என்ற புள்ளிகள் கணக்கில் அடுத்தடுத்து 2 செட்களையும் கைப்பற்றினார்.

அதனால் 45நிமிடங்கள் நடந்த ஆட்டத்தை 2-0 என்ற கணக்கில் வென்ற லக்‌ஷயா சென் காலிறுதிக்கு முன்னேறினார். பெண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டங்களில் இந்தியாவின் திரிசா ஜாலி/காயத்ரி கோபிசந்த், தனிஷா கிறஸ்டோ/அஸ்வினி பொன்னப்பா இணைகளும் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுமீத் ரெட்டி/சிக்கி ரெட்டி இணையும் நேற்று 2வது சுற்றில் தோற்று வெளியேறின.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி