இந்த, காவலர் குடியிருப்பு மட்டுமின்றி, அங்குள்ளவர்கள் தங்களது வீட்டின் கழிவுகளை அருகிலுள்ள பெரிய ஏரியில் விடுகின்றனர். இதனால், ஏரியில் துர்நாற்றம் வீசி வந்த நிலையில், கடந்த சில தினங்களாக ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் தற்போது கூடுதல் துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதியில் செல்பவர்கள் மூக்கை பிடித்தவாறே செல்ல வேண்டியுள்ளது.மேலும், இந்த ஏரியையொட்டி ஊராட்சிக்கு சொந்தமான 3 குடிநீர் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த, கிணற்று நீரைத்தான் ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் உபயோகிப்பதால் வாந்தி, போதி ஏற்படுவதுடன், ஏரியில் கழிவுநீர் கலப்பதால் மீன்கள் ஏரியில் செத்து மிதக்கிறது, குடிநீர் கிணறும் மாசுபடுகிறது. எனவே, அப்பகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகின்ற ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.