ஏரியில் விவசாயி விரித்த வலையில் 20 கிலோ எடை கெண்டை மீன் சிக்கியது

பொன்னை: பொன்னை அருகே சின்னகீசகுப்பம் ஏரியில் விவசாயி மீன் பிடிக்க வலையில் 20 கிலோ எடை கொண்ட கெண்டை மீன் சிக்கியது. வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த சோமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஈஸ்வரன். இவர் நேற்று சின்னகீசகுப்பம் பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது அவர் விரித்த வலையில் சுமார் 20 கிலோ எடை கொண்ட கெண்டை மீன் பிடிபட்டது. இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் வியப்புடன் மீனை பார்த்து சென்றனர்.

Related posts

ஏரியில் குளிக்கும் போது சுழலில் சிக்கி 4 குழந்தைகள் உயிரிழந்த பரிதாப சம்பவம்!

லெபனான் நாட்டில் பேஜர்கள் மூலம் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்: 8 பேர் பலி; 2,700-க்கும் மேற்பட்டோர் காயம்!

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி இந்தியா கூட்டணி கட்சிகள் புதுவையில் நாளை பந்த்