Thursday, October 3, 2024
Home » சென்னை கிங்ஸ் ஆய்வகம் கொடுத்த அறிக்கையில் நெய்யில் கலப்படம் இல்லை என தகவல் : லட்டு சர்ச்சை தொடர்பான வழக்கில் நீதிபதி அதிரடி!!

சென்னை கிங்ஸ் ஆய்வகம் கொடுத்த அறிக்கையில் நெய்யில் கலப்படம் இல்லை என தகவல் : லட்டு சர்ச்சை தொடர்பான வழக்கில் நீதிபதி அதிரடி!!

by Porselvi

மதுரை : திருப்பதி லட்டு சர்ச்சை தொடர்பான வழக்கில் ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் வழங்கிய ஏ.ஆர்.நிறுவனத்தின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என ஒன்றிய அரசு அனுப்பிய நோட்டீஸ்க்கு தடை கோரி அந்நிறுவனம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீதான இன்றைய விசாரணையில், திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்துக்கு ஒன்றிய உணவு பாதுகாப்பு துறை தந்த நோட்டீஸ் தெளிவின்றி உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கடும் கண்டனம் தெரிவித்தது.

அத்துடன் ஒன்றிய அரசு நீதிபதி சதீஷ் குமார் சரமாரியாக கேள்வி எழுப்பினார். அதில், “ஏ.ஆர்.நிறுவனம் செய்த விதிமீறல் என்ன? எந்த அடிப்படையில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது? உச்ச நீதிமன்றம் கூறியது போல அரசியலில் இருந்து கடவுளை விலக்கி வைத்து விசாரணை நடத்துவதே சரியாக இருக்கும்.ஒரு நோட்டீஸ் அனுப்பினால், அதற்கு பதிலளிக்க உரிய கால அவகாசம் அளிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனம் என்ன விதிமீறல் செய்தது என்ற எந்த விபரமும் நோட்டீசில் இல்லை. நிறுவனத்துக்கு உணவு பாதுகாப்புத்துறை எந்த சட்ட அடிப்படையில் நோட்டீஸ் கொடுத்துள்ளது?.

நெய் சோதனையில் குஜராத் ஆய்வகம் கொடுத்த அறிக்கைக்கும், சென்னை கிங்க்ஸ் ஆய்வக அறிக்கைக்கும் முரண்பாடு உள்ளது. சென்னை ஆய்வில் கலப்படம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் அரசு நிறுவனம்தான்.ஒன்றிய தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் நடத்திய சோதனை முடிவுகளை ஏன் வெளியிடவில்லை?. ஒன்றிய அரசானது அந்நிறுவனத்திற்கு புதிய நோட்டீஸ் அளிக்க வேண்டும். பதிலளிக்க 14 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் .உரிய அவகாசத்தில் நிறுவனம் உரிய விளக்கம் அளித்து நிவாரணம் தேடிக் கொள்ளலாம்,” இவ்வாறு தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.

You may also like

Leave a Comment

seventeen − six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi