கடந்த வாரம் ஒரு கிலோ தேங்காய் விலை ரூ.55-ஆக உயர்ந்த நிலையில் நேற்று வாடிப்பட்டி சந்தையில் ஒரு தேங்காய் ரூ.28-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ கேரட் விலை ரூ.50ல் இருந்து ரூ.70ஆகவும் வெங்காயம் விலை ரூ.40-ல் இருந்து ரூ.60 ஆகவும் உயர்ந்தது. மதுரை மட்டுமின்றி தமிழ்நாட்டில் பல இடங்களில் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. ஒட்டன்சத்திரத்தில் தினமும் 20,000 பெட்டிகள் தக்காளி வந்த நிலையில் 2 நாளாக 7,000 பெட்டிகளே வருகின்றன. வானிலை காரணமாக காய்கறிகள் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தகவல் தெரிவித்தனர்.