வானூர்: விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த பெரும்பாக்கத்தில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. நேற்று காலை இங்கு பாறைக்கு வெடிவைத்து உடைக்கும் பணியில் தொழிலாளர்ள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மண்சரிவு ஏற்பட்டு 2 பேர் சிக்கிக்கொண்டனர்.
இதையடுத்து சக தொழிலாளர்கள் அவர்களை பொக்லைன் இயந்திரம் உதவியுடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஆனால் இருவரும் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி பலியானது தெரியவந்தது. விசாரணையில் பலியான தொழிலாளர்கள் விழுப்புரம் மாவட்டம் எறையூரைச் சேர்ந்த அய்யனார் (26). சேலம் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் (30) என தெரியவந்தது. இதுகுறித்து மயிலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.