இதை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் முருகனை மீட்டு ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து முருகனின் மனைவி வள்ளி(43) செங்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்படி செங்கம் போலீசார் முருகனிடம் வாக்குமூலம் பெற்று, கட்டப்பஞ்சாயத்து செய்த நாட்டாண்மை செல்வராஜி, ஜீவா, சிவா, கிருஷ்ணன் உட்பட 10 பேர் மீது கட்டப்பஞ்சாயத்து, மிரட்டல் உட்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதில் செல்வராஜி உட்பட 4 பேரை கைது செய்தனர். மேலும் 6 பேரை தேடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி முருகன் உயிரிழந்தார். இதையடுத்து கட்டப்பஞ்சாயத்து செய்து தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.