டூவீலரில் லிப்ட் கேட்டு சென்ற போது பீர்பாட்டில் தராத தொழிலாளி சரமாரியாக அடித்து கொலை 2 வாலிபர்கள் கைது

நாமக்கல்: நாமக்கல்லில் நள்ளிரவு டூவீலரில் லிப்ட் கேட்டு சென்ற போது, பீர்பாட்டில் தராததால் ஓட்டல் தொழிலாளி சரமாரியாக அடித்து கொலை செய்யப்பட்டார். கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்தவர் கோ கண்ணன்(45). குடும்பத்தை விட்டு பிரிந்து நாமக்கல்லில் தங்கி ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். கடந்த 15ம்தேதி இரவு 11 மணியளவில், கண்ணன் ஒரு பீர்பாட்டிலுடன் திருச்செங்கோடு சாலையில் நின்றிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேரிடம் கண்ணன் லிப்ட் கேட்டு சென்றுள்ளார். நல்லிபாளையம் பாலம் அருகில் பைக்கில் இருந்த ஒருவர், கண்ணனிடம் இருந்த பீர்பாட்டிலை பிடுங்கி கொண்டார். இதில் அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும், கண்ணனை சரமாரி தாக்கி மறைவான பகுதிக்கு தூக்கி சென்று, கல்லால் அவரது முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பினர். இது குறித்து நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தியதில், அவரை கொலை செய்தது நாமக்கல் ராமாவரம்புதூரைச் சேர்ந்த சக்திவேல் (22), கவுதம் (28) என தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Related posts

காய்கறி சாகுபடியில் கச்சிதமான வருமானம்!

பாலியல் வழக்கில் நாகர்கோவில் காசிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க ஐகோர்ட் மறுப்பு

அரியானா சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும் என அறிப்பு