இதேபோல், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி அலுவலகத்திற்று லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பீட்டர் பால்துரை தலைமையில் இன்ஸ்பெக்டர் அனிதா மற்றும் போலீசார், கைலி மற்றும் காக்கி சட்டை அணிந்து டிரைவர் போல மாறுவேடத்தில் நேற்று வந்தனர். அங்கு ஊழியர்களின் பணி விவரங்களை கேட்டபடி சென்ற லஞ்ச ஒழிப்புத்துறையினர், அதிரடியாக அலுவலக கதவை பூட்டி அனைவரது செல்போன்களையும் வாங்கிக் கொண்டனர். பின்னர் ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தினர். அப்போது பேரூராட்சி செயல் அலுவலரிடம் ரூ.1.09 லட்சம் மற்றும் டிரைவரிடம் இருந்து ரூ.25,500 என ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 500ஐ பறிமுதல் செய்தனர்.