டெல்லி: குவைத் தீ விபத்தில் இந்தியர்கள் 40 பேர் உயிரிழந்ததை அடுத்து வெளியுறவு இணை அமைச்சர் அந்நாட்டுக்கு விரைகிறார். பிரதமர் மோடி உத்தரவின் பேரில் ஒன்றிய வெளியுறவு இணை அமைச்சர் கே.வி.சிங் குவைத் விரைகிறார். கட்டடத்தில் தீ விபத்து காரணமாக ஏற்பட்ட புகைமூட்டத்தில் சிக்கிய பலர் மூச்சுத்திணறி 53க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.