குவைத்தில் 2ஆண்டுகளில் 1,400இந்தியர்கள் உயிரிழப்பு: வெளியுறவு அமைச்சகம் தகவல்

டெல்லி: குவைத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டுமே பல்வேறு விபத்துகளில் 1,400 இந்தியர்கள் உயிரிழந்ததாக வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 2022-ல் குவைத்தில் 731 இந்தியத் தொழிலாளர்களும் 2023-ல் 708 இந்திய தொழிலாளர்களும் உயிரிழந்துள்ளனர். இவ்வாண்டு நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பிப்ரவரி.2-ல் வெளியுறவு அமைச்சகம் அளித்த பதிலில் தகவல் தெரிவிக்கப்பட்டது. குவைத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களில் 1279 பேர், 2020-ல் 1,201 பேர் 2021-ல் கொரோனாவால் உயிரிழந்ததாக அரசு தகவல் தெரிவித்துள்ளது. 2014-ல் இருந்து 2018 வரை குவைத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர்களில் 2,932 பேர் பல காரணங்களால் மரணம் அடைந்துள்ளனர்.

Related posts

திருச்சூரில் இருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள் வெப்படை அருகே பிடிபட்ட பரபரப்பு காட்சி வெளியானது!

மராட்டிய சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 26-ம் தேதிக்குள் தேர்தல்!

கொடைக்கானலில் தடையை மீறி டிஜே நிகழ்ச்சி; தனியார் விடுதியின் அரங்கத்துக்கு சீல்!