கொச்சி: குவைத் தீ விபத்தில் இறந்த இந்தியர்கள் உடல்கள் கொச்சி வந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழ்நாடு அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் மரியாதை செலுத்தினர். 45 இந்தியர்களின் உடல்கள் ராணுவ விமானம் மூலம் கொண்டுவரப்பட்டன. இந்த நிலையில், ஏழு தமிழர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.