சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: நடிகை குஷ்பு கக்கிய விஷத்தை கடந்து போனால் மீண்டும் துண்டை இடுப்பில் கட்ட வேண்டிய கொடுமை ஏற்படும். எனவே, பெரும் தவறை செய்துவிட்டு மன்னிப்பு கேட்க மறுக்கும் குஷ்புவை கண்டித்து அவர் வீட்டின் முன்பு நாளை,தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி.,எஸ்டி., பிரிவின் சார்பில் எனது தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும். அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.