மதுரை: குறவன், குறத்தி என்ற பெயரை பொது இடங்களில் பயன்படுத்த தடை விதிக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ராவணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். வழக்கு குறித்து ஆதிதிராவிடர் நலத்துறை பதில் தரும்படி நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.