குன்றத்தூர் அருகே சட்டவிரோத ஆலைகள் மீது நடவடிக்கை கோரியவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக கவுன்சிலர் தலைமறைவு; போலீசார் வலைவீச்சு..!!

காஞ்சிபுரம்: குன்றத்தூர் அருகே சட்டவிரோத ஆலைகள் மீது நடவடிக்கை கோரியவர்களை மிரட்டிய அதிமுக கவுன்சிலர் தலைமறைவாகினார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 29வது வார்டில் ஏறக்குறைய 2000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு அருகிலேயே தனியார் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. குறிப்பாக பிளாஸ்டிக் உருக்குவது, இரும்பு உருக்குவது போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இந்த பகுதிகளில் சுகாதார சீர்கேடு எழுவதாக குற்றசாட்டுகள் எழுந்தது. இதுகுறித்து அப்பகுதியில் உள்ள வழக்கறிஞர், சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மின்வாரிய துறை, நகராட்சி ஆணையம் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் புகார்கள் அனுப்பினர்.

அதில், குன்றத்தூர் அருகே குடியிருப்பு பகுதிகளில் அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்படும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால் ஆத்திரமடைந்து, புகார் அளித்தவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய குன்றத்தூர் அதிமுக கவுன்சிலர் ராஜா உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய நபரான அதிமுக கவுன்சிலர் உட்பட 2 பேர் தலைமறைவாகினர். அதிமுக கவுன்சிலர் ராஜாவை பிடிக்க போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related posts

பிரிட்டன் பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் ‘மேரிகோல்டு’: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு