நீலகிரி : குன்னூரில் லாரி ஓட்டுநர்களின் வேலை நிறுத்தத்தால் ரூ.18 கோடி மதிப்புள்ள தேயிலைத் தூள் தேக்கம் அடைந்துள்ளது. லாரி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் தேயிலைத் தூள் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. ஒன்றிய அரசின் புதிய வாகனச் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து லாரி ஓட்டுநர்கள் 24 மணி நேரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.