தேனி மாவட்டம் மட்டுமல்லாமல், தமிழகத்தின் பிறமாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் இங்கு வந்து குளித்து மகிழ்வர். இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று பெய்த அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், நேற்று அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றி, பிற்பகல் 2 மணிக்கு பிறகு குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்தது. இந்நிலையில், அருவிக்கு வரும் நீர்வரத்து சீரானதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இதனால், இன்று காலை கும்பக்கரை அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.