திண்டுக்கல் : கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் வனப்பகுதியில் நேற்று பெய்த கனமழையால் கும்பக்கரை அருகில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.