குமரியில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி.. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவு!!

சென்னை : கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு :

“கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் வட்டம், கிராமம், ஆற்றூர்தோப்புவிளையில் வசித்துவரும் டெம்போ ஓட்டுநர் திரு.சோம்ராஜ் என்பவரது மனைவி திருமதி.சித்ரா (வயது 47), மகள் திருமதி.ஆதிரா (வயது 23) மற்றும் மகன் செல்வன். அஸ்வின் (வயது 19) ஆகிய மூவரும் நேற்று (3-10-2023) அவர்களது வீட்டில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

தனது குடும்பத்தினரை இழந்து வாடும் திரு.சோம்ராஜ் மற்றும் அவரது உறவினர்களுக்கு எனது
ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்,”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!