இந்நிலையில் கடலின் நீர்மட்டம் குறைந்ததன் காரணமாக சுற்றுலா படகுகளை படகு தளத்தில் இருந்து விவேகானந்தர் மண்டபத்துக்கு இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள் படகு குழாம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடல் நீர்மட்டம் சீரான உடன் சுற்றுலா படகு சேவை மீண்டும் தொடங்குவதற்கான அறிவிப்பு சுற்றுலா பயணிகளுக்கு கொடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.