குமரி முதல் காஷ்மீர் வரை INDIA கூட்டணியின் வெற்றியை உறுதி செய்திட: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை: கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கழக நிர்வாகிகளை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இது குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது X தள பதிவில் தெரிவித்ததாவது; குமரி முதல் காஷ்மீர் வரை INDIA கூட்டணியின் வெற்றியை உறுதி செய்திட, கழக நாடாளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வைக்குழுவின் ஆலோசனைக் கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறோம். இதன் தொடர்ச்சியாக, கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கழக நிர்வாகிகளை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று சந்தித்து ஆலோசனை மேற்கொண்டோம்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட அமைச்சர் – மாவட்டக் கழக செயலாளர் – ஒன்றிய – பகுதி- நகர – பேரூர் கழக நிர்வாகிகள், மேயர் – மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொகுதியில் நிலவுகின்ற சூழலை எடுத்துரைத்துனர். மதவெறிக்கு முற்றுப்புள்ளி வைத்திடும் விதமாக, குமரியில் நாம் பெறுகிற வெற்றி, இமயத்தில் எதிரொலிக்கும் வகையில் களப்பணியாற்றிடுவோம் என கழக நிர்வாகிகளைக் கேட்டுக் கொண்டோம். என்று பதிவிட்டுள்ளார்.

 

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு