கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் தேரூர் பெரிய குளம் நிரம்பியுள்ளது. தேரூர் குளத்தில் உடைப்பு ஏற்படும் அபாயம் காரணமாக முன்னெச்சரிக்கையாக குளத்தின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளது. தேரூர், அக்கரை உள்ளிட்ட கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.