எடியூரப்பா முதல்வராக இருந்தபோது பெங்களூரு கங்கேனஹள்ளி லே அவுட்டில் 1.11 ஏக்கர் நிலம் குமாரசாமிக்கு ஒதுக்கப்பட்டது குறித்து லோக்ஆயுக்தா விசாரணை நடத்திவரும் நிலையில், இதுவரை அந்த வழக்கு விசாரணை முடிக்கப்படவில்லை. தற்போது இந்த வழக்கு விசாரணையை லோக்ஆயுக்தா முடுக்கிவிட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு எடியூரப்பாவிற்கு லோக்ஆயுக்தா போலீசார் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், அதன்படி நேற்று லோக்ஆயுக்தா முன் விசாரணைக்கு எடியூரப்பா நேரில் ஆஜரானார். அவரிடம் விரிவாக விசாரணை நடத்தப்பட்டது.