இரவு நேரத்தில் தோட்டத்து வீட்டின் அருகே அமைக்கப்பட்ட கிடையில் அடைப்பது வழக்கம். நேற்று முன்தினம் இரவு கிடையில் 40 செம்மறி ஆடுகளை அடைத்து விட்டு, ஆர்.வெள்ளோடு முத்தாலம்மன் கோயில் திருவிழாவிற்கு சென்று விட்டனர்.
பின்னர் வீடு திரும்பிய போது, தெருநாய்கள் கடித்து 9 செம்மறி ஆடுகள் பலியானதும், 6 ஆடுகள் படுகாயத்துடன் இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து நேற்று காலை கால்நடைத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு ஆர்.வெள்ளோடு கால்நடை மருத்துவர் தெய்வேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் படுகாயத்துடன் இருந்த 6 ஆடுகளுக்கு
சிகிச்சையளிக்கப்பட்டது.