இந்நிலையில், தாம்பரத்தில் பயணிகளை இறக்கி விட்ட அப்பேருந்தின் ஓட்டுனரான மணிமங்கலத்தை சேர்ந்த சுரேஷ் (47), நடத்துனரான மதுராந்தகம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (38) ஆகியோர் பேருந்தில் கட்டைப்பை ஒன்று கேட்பார் இன்றி கிடப்பதை பார்த்தனர். அதை திறந்து பார்த்தபோது அதில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 6 சவரன் நகைகள் மற்றும் துணிமணிகள் இருந்துள்ளன. இதையடுத்து கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்து, பின்பு கேளம்பாக்கம் காவல் நிலையத்திற்கு சென்று அந்த பையை ஒப்படைத்தனர். இதனிடையே, பையை பறிகொடுத்த சுதா தாம்பரம், கேளம்பாக்கம் காவல் நிலையங்களுக்கு தகவல் கொடுத்தார்.
கேளம்பாக்கம் போலீசார் சுதாவை வரவழைத்து ஓட்டுனர், நடத்துனர் முன்னிலையில் அவர் தொலைத்த கட்டைப்பை மற்றும் அதிலிருந்த 6 சவரன் தங்க நகை, துணிமணிகளை ஒப்படைத்தனர். இவற்றை பெற்றுக்கொண்ட சுதா நேர்மையுடன் நடந்துக்கொண்ட ஓட்டுனர், மற்றும் நடத்துனருக்கு நன்றி தெரிவித்தார். காவல்துறையினரும் ஓட்டுனர் மற்றும் நடத்துனவரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.