கூடங்குளம்: மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்

நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. கடந்த மே 5-ல் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது பராமரிப்பு பணி முடிந்த நிலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, இன்று மாலைக்குள் 1,000 மெகாவாட்டை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே முதல் அணு உலையில் 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

Related posts

பி.டி.ஆர். கால்வாய், தந்தை பெரியார் கால்வாயிலும் பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும்: ஒ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்

ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை