இதன்படி கடந்த 4 வார சனிக்கிழமைகளில் பக்தர்கள் கோயிலுக்கு வந்து சுவாமியை வழிபட்டு சென்றனர். இந்நிலையில், கோயிலின் உபகோயிலான சோனை கருப்பண்ணசாமிக்கு நேற்று முன்தினம் இரவு சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினார். பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் படையலிட்டு பூஜை செய்யப்பட்டது. பக்தர்கள் வழங்கிய 47 ஆடுகள், 27 கோழிகள் பலியிடப்பட்டன. பின்னர் பக்தர்களுக்கு அசைவ விருந்து பறிமாறப்பட்டது. நள்ளிரவு வரை நடந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.