கேடிஎம் நிறுவனம் இளைஞர்களைக் கவரும் வகையில் புதிய பைக்குகளை அறிமுகம் செய்து வருகிறது. இந்தியச் சந்தையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வைத்துள்ள இந்த நிறுவனம், நாடு முழுவதும் பிரத்யேக பிரீமியம் ஷோரூம்களை துவக்க உள்ளது. அதிக திறன் கொண்ட பைக்குகளை தனது பிரத்யேக ஷோரூம்கள் மூலம் விற்பனை செய்ய இந்த நிறுவனம் திட்டமிட்டள்ளது. 400 சிசிதிறனுக்கு மேல் உள்ள பைக்குகள் இந்த ஷோரூம்கள் மூலம் விற்பனை செய்யப்படும். குறிப்பாக இந்த நிறுவனத்தின் சூப்பர் பைக்குகள் அனைத்தும் இந்த ஷோரூம்கள் மூலமாகவே அறிமுகமாகும் என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது.