கிருஷ்ணகிரி மாணவி பலாத்காரம் : மேலும் ஒருவர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைதுசெய்தனர். கந்திகுப்பம் தனியார் பள்ளியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மறைந்த நா.த.க. முன்னாள் நிர்வாகி சிவராமனின் கூட்டாளியான காவேரிப்பட்டினத்தை சேர்ந்த ரவி (30) கைது செய்யப்பட்டார். தற்கொலை செய்துகொண்ட சிவராமனுக்கு உடந்தையாக இருந்த ரவியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். மேலும் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இதுவரை 20 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்

Related posts

மானாமதுரை எல்லைப்பிடாரி கோயில் விழாவில் பெண்கள் சட்டிச்சோறு சுமந்து ஊர்வலம்

ஹிஸ்புல்லா தாக்குதல் : இஸ்ரேல் விமானப்படை கேப்டன்கள் உயிரிழப்பு

‛கடிகாரம்’ சின்னத்தை கேட்டு உச்சநீதிமன்றத்தில் சரத்பவார் புதிய மனு