கே.பி.அன்பழகன் மயங்கியதால் பரபரப்பு

சென்னை: அமளியில் ஈடுபட்டதால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர். அதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி அறையில் அனைத்து அதிமுக உறுப்பினர்களும் ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது, முன்னாள் அமைச்சரும் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கினார். தலைமைச்செயலக மருத்துவ குழுவினர் அவருக்கு முதலுதவி செய்தனர். குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக லேசான மயக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு சற்று நேரம் ஓய்வெடுத்த கே.பி.அன்பழகன் அங்கிருந்து மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றார்.

Related posts

கூகுள் மேப்பை நம்பி ஆற்றுக்குள் காரை விட்ட இளைஞர்கள்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தீபாவளியையொட்டி அக்டோபர் 29ம் தேதிக்கு; முக்கிய ரயில்கள் அனைத்திலும் 5 நிமிடத்தில் புக்கிங் முடிந்தது: தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல்