சென்னை : சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திலேயே நாளை மாலை விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அவரது மைத்துனர் சதீஷ் அறிவித்துள்ளார். நாளை மாலை சுமார் 4.45 மணிக்கு முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இன்று காலை 6.10 மணியளவில் விஜயகாந்த் மறைந்ததாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.