கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை கடும் சரிவு

சென்னை: சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் கடுமையாக சரிந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு திண்டுக்கல், மதுரை, வேலூர், நிலக்கோட்டை, திருச்சி, ஒசூர், சேலம் உள்ளிட்ட வெளியூர்களிலிருந்தும், கர்நாடகா, ஆந்திரா ஆகிய வெளி மாநிலங்களிலிருந்தும் தினமும் பூக்கள் வருகிறது. இந்நிலையில் விசேஷ நாட்கள், முகூர்த்த நாட்கள் முடிந்துவிட்ட நிலையில், பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் கடுமையாக சரிந்துள்ளது. நேற்று காலை ஒரு கிலோ மல்லி மற்றும் முல்லை ரூ.200க்கும், கனகாம்பரம் ரூ.250க்கும், சம்பங்கி ரூ.20க்கும், சாக்லெட் ரோஸ் ரூ.50க்கும், பன்னீர் ரோஸ் ரூ.30க்கும், அரளிப் பூ ரூ.150க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாகக்குழு தலைவர் முத்துராஜ் கூறும்போது, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விசேஷ நாட்கள், முகூர்த்த நாட்கள் முடிந்துவிட்டதால் அனைத்து பூக்களின் விலையில் கடும் சரிவு ஏற்பட்டதால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஆனால் சென்னை புறநகர் சில்லறை வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சியுடன் பூக்களை வாங்கிச் செல்கின்றனர். மேலும் நாளை அமாவாசை என்பதால் பூக்களின் விலை உயரும் என தெரிவித்தார்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது