சென்னை: கோயம்பேடு சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய வாகனங்களுக்கு தீ வைத்த நபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பழனிமுத்து வாகனங்களுக்கு தீ வைத்த சிசிடிவி காட்சிகளை காவல்துறை வெளியிட்டுள்ளது. நேற்று கோயம்பேடு வைக்கப்பட்டிருந்த 10க்கும் அதிகமான பழைய வாகனங்களில் தீ பற்றியது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர் பழனிமுத்து என்பவரை கைது செய்தனர்.