இந்நிலையில் நேற்று முன்தினம், அம்பத்தூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் டில்லி பாபு, தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தார். அப்போது, புழல் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோவை சோதனை செய்தனர். அதில், ரூ.80,000 மதிப்புள்ள 700 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது. அதை பறிமுதல் செய்தனர். பின்னர், ஓட்டுனரான தென்காசி மலையராமபுரம் கிராமத்தை சேர்ந்த பொன்ராஜை(31) காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
அதில், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு குட்கா பொருட்கள் கடத்தியதும், போலீசார் வாகன சோதனை செய்வதை அறிந்து, புழல் பகுதியில் வாகனத்தை நிறுத்தி வைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.