இதன்படி, கனகாம்பரம் 800க்கும் முல்லை மற்றும் ஜாதி மல்லி 500 க்கும் சாமந்தி 60 க்கும் சம்பங்கி 220க்கும் சாக்லேட் ரோஸ் 140 க்கும் பன்னீர் ரோஸ் 50 க்கும் அரளி பூ 100 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘’ஒணம் பண்டிகை முன்னிட்டு நேற்று அனைத்து பூக்களின் விலை உயர்ந்தது. வியாபாரிகள் எதிர்பார்த்த நிலையில் போதுமான வியாபாரம் இல்லாததால் ஏமாற்றும் அடைந்தனர். முகூர்த்த நாட்கள் முடிந்ததால் இன்று காலை மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை குறைந்துள்ளது. நாளை மீண்டும் அனைத்து பூக்களின் விலை குறையும்’ என்றார்.