சென்னை: சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனுவை வழங்கினார்.நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் வழங்கும் நிகழ்ச்சியை அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இதனையடுத்து விருப்பமனு தாக்கலின் இரண்டாவது நாளான நேற்று ஏராளமான நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை ஆர்வத்துடன் அளித்தனர். இந்நிலையில், விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர் நேற்று விருப்ப மனுவை வழங்கினார். விருப்ப மனு அளித்தவர்களுடன் இன்று தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற உள்ளது.