கோயம்பேடு பகுதியில் தெரு நாய்களை அப்புறப்படுத்தக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு..!!

சென்னை: கோயம்பேடு மெட்ரோ சோன் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்தக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி போடப்படாத தெரு நாய்களை அப்புறப்படுத்தக் கோரி குடியிருப்பில் வசிக்கும் ஷபீனா பாத்திமா என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். நாய்களை பிடித்துச் செல்ல மாநகராட்சி ஊழியர்கள் வந்தாலும் சமூக ஆர்வலர்கள் எனக்கூறி சிலர் தடுப்பதாக புகார் எழுந்துள்ளது. நாய்களை துன்புறுத்துவதாக கூறி ப்ளூ க்ராஸ் அமைப்பு மூலம் வழக்கு தொடருவோம் என ஊழியர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக மனு தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரு நாய்களை அப்புறப்படுத்தக் கோரிய விண்ணப்பித்தை பரிசீலிப்பதாக ஐகோர்ட்டில் மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

வருமான வரித்துறை அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் சின்னம் பொருத்தும் பணி துவங்கியது!

மெரினாவில் ரேபிடோ ஓட்டுநரிடம் போலீஸ் எனக்கூறி, ரூ.500, செல்போன் பறித்த ஒருவர் கைது!