இதுகுறித்து, மின்வாரியம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்
இந்த விடுமுறை காலங்களில் ‘மின் பாதுகாப்பு’ பற்றி பள்ளி சிறார்களுக்கு சொல்லி தருவோம்.
🔹கிரிக்கெட் பந்து எடுக்க மாடிக்கு செல்வது, மரத்தில் ஏறுவது தவிர்க்க வேண்டும். அப்படி செல்ல நேரிட்டால், மேலே மின் கம்பி, மின் கம்பம் அருகே செல்லக்கூடாது.
🔹பூங்காக்களிலோ, பொது இடத்திலோ விளையாடும் போது, மின் கேபிள், வயர், மின் பெட்டி இருந்தால் அருகில் செல்லவோ தொடவோ கூடாது.
🔹விளையாடும்போது பெரியோர் மேற்பார்வை வேண்டும்.
🔹ஆசிரியர்கள் தங்களது பள்ளி குழுக்களில் அறிவுறுத்தலாம்.
TANGEDCO வும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து மின்சார விபத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. பெற்றோர், ஆசிரியர், அனைவரும் இணைந்து நமது பிள்ளைகளுக்கு மின்சாரத்தின் ஆபத்துக்களை சொல்லித்தர தருவோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.