அதன்படி ஏழு.கிலோ எடையுள்ள இரும்புச் சுத்தியலால் பெரிய டயரை இரண்டு மணிநேரத்தில் 3000 முறை தொடர்ந்து அடித்து உலகசாதனை படைத்தார். இவர் செய்த இந்த சாதனை சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இந்த சாதனை குறித்து துர்காம்பிகை கூறியதாவது: ‘உடற்பயிற்சி என்பது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் தற்போது அவசியம் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த சாதனையை செய்ய முன் வந்தேன். எனது கணவர் சபரீஷ் மற்றும் பயிற்சியாளர் பாலன் ஆகியோர் அளித்த ஊக்கமே இந்த சாதனைக்கு காரணம் என பெருமிதத்துடன் தெரிவித்தார்.
ஏழு கிலோ எடையுள்ள சுத்தியலை தூக்குவதே கடினம் என்ற நிலையில் அதனைf; கொண்டு 3000 முறை தொடர்ந்து டயர் மேல் அடித்து சாதனை செய்த இரும்புப் பெண்மணி துர்காம்பிகையை பலரும் பாராட்டி வருகின்றனர். இதற்கிடையில் தனது குழந்தைகளின் வளர்ப்பு, குடும்பப் பொறுப்புகளையும் கவனித்துக்கொண்டு பிறப்பாலேயே பெண் என்பவள் மல்டி டாஸ்கிங் திறன்கொண்டவர் என்பதற்கு மீண்டும் சான்றாக மாறியிருக்கிறார் துர்காம்பிகை