உலக சாதனை படைத்த கோவை பெண் !

கோவையை சேர்ந்த பெண் துர்காம்பிகை, ஏழு கிலோ எடையுள்ள இரும்புச் சுத்தியலால் இரண்டு மணி நேரத்தில் 3000 முறை டயரில் அடித்து உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார்.கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் துர்காம்பிகை. உடற்பயிற்சி செய்வதில் இவரது ஆர்வத்தைக் கண்ட கணவர் சபரீஷ், மனைவிக்கு மல்யுத்தப் பயிற்சிப் பள்ளி நடத்திவரும் பாலன் என்பவருடன் இணைந்து பயிற்சி அளித்துள்ளார்.தொடர்ந்து பயிற்சிகள் மேற்கொண்ட துர்காம்பிகை, உடற்பயிற்சி செய்வது குறித்து பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நூதன உலகசாதனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அதன்படி ஏழு.கிலோ எடையுள்ள இரும்புச் சுத்தியலால் பெரிய டயரை இரண்டு மணிநேரத்தில் 3000 முறை தொடர்ந்து அடித்து உலகசாதனை படைத்தார். இவர் செய்த இந்த சாதனை சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இந்த சாதனை குறித்து துர்காம்பிகை கூறியதாவது: ‘உடற்பயிற்சி என்பது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் தற்போது அவசியம் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த சாதனையை செய்ய முன் வந்தேன். எனது கணவர் சபரீஷ் மற்றும் பயிற்சியாளர் பாலன் ஆகியோர் அளித்த ஊக்கமே இந்த சாதனைக்கு காரணம் என பெருமிதத்துடன் தெரிவித்தார்.

ஏழு கிலோ எடையுள்ள சுத்தியலை தூக்குவதே கடினம் என்ற நிலையில் அதனைf; கொண்டு 3000 முறை தொடர்ந்து டயர் மேல் அடித்து சாதனை செய்த இரும்புப் பெண்மணி துர்காம்பிகையை பலரும் பாராட்டி வருகின்றனர். இதற்கிடையில் தனது குழந்தைகளின் வளர்ப்பு, குடும்பப் பொறுப்புகளையும் கவனித்துக்கொண்டு பிறப்பாலேயே பெண் என்பவள் மல்டி டாஸ்கிங் திறன்கொண்டவர் என்பதற்கு மீண்டும் சான்றாக மாறியிருக்கிறார் துர்காம்பிகை

Related posts

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால்