கோவை: கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டியில் தண்ணீர் தொட்டியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்த குமார், மனோஜ் ஆகியோர் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.