இதைத் தொடர்ந்து வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, அதில் பதிவான காட்சிகளை வைத்து ஆர்.கே.நகர் போலீசில் சோனியா தேவி புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை வைத்து கொருக்குப்பேட்டை ஜே.ஜே.நகர் குறுக்கு தெருவை சேர்ந்த பரத் என்கின்ற பரத் குமார் (22) என்பவர், லட்சுமி பாஸ் மால் வீட்டில், திருடுவதற்காக நிர்வாணமாக நுழைந்து, பின்னர் அங்கிருந்து ஓடியது தெரியவந்தது. அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இவர்மீது பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.