இந்த பிரியாணியை சாப்பிட்டதில் 2 சிறுவர்கள் மற்றும் ஜெயந்தி (52), சுவாதி (25), சரண்யா (32) ஆகிய 5 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் பெண்கள் 3 பேரும் புறநோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். சிறுவர்கள் இருவரும் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகவலறிந்த தண்டையார்பேட்டை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ராஜபாண்டி, சம்பந்தப்பட்ட பிரியாணி கடையில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கி கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், பிரியாணி மாதிரியை சேகரித்து ஆய்வுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.