விழுப்புரம்: கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். இன்று அதிகாலை அரவான் சிரசுக்கு முதல் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேரோட்டம் நிறைவடைந்த பின் இன்று மாலை அரவான் களப்பலி நிகழ்ச்சி நடைபெறும். களப்பலிக்கு பின் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருநங்ககைகள் விதவை கோலம் ஏற்கும் நிகழ்வு நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.