பின்னர், படிப்படியாக பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் நேற்று பிற்பகல் முதல் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நீர்வரத்து சீராகாததால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க 2-வது நாளாக இன்றும் தடை நீட்டிக்கப்பட்டது. தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும், குற்றாலத்திலும் மழை பெய்யவில்லை எனவே விரைவில் தண்ணீர் குறைய வாய்ப்பு உள்ளது. அவ்வாறு தண்ணீர் குறையும் பட்சத்தில் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்க படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.